நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு...!

நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு...!

நாட்டில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 8 பகுதியை சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து அவர் வெலிசறை மார்வு சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

கொவிட்-19 தொற்றுறுடன் நுரையீல் தொற்று நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது,

கடுவளை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 27 ஆம் திகதி மரணித்தார்.

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் இதயம் செயலிழந்தமை காரணமாகவே அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குருவாதொட்ட பகுதியை சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் மரணித்தார்.

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்ததாக கூறப்படுகின்றது.

மார்பில் ஏற்பட்ட தொற்று மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக அவர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Capture