
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 52 பேர் கைது..!
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சிவில் அதிகாரிகள் சிலரை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் முக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.