கல்வி செயல்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கல்வி செயல்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

மேல் மாகாணத்தில் அனைத்து தரங்களுக்குமான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் கடந்த 25ம் திகதி முதல் தரம் 11 மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஏனைய வகுப்புக்களையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் சவால்களுக்கு மத்தியில் உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.