சடலமாக மீட்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

சடலமாக மீட்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

மொனராகலை - அம்புகமூவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம் பெற்றுள்ளது.

அம்புகமூவ பொலிஸ் நிலையத்தின் எம்.எஸ். சுவர்ணமாலி என்ற 33 வயது பெண் பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலமே, மீட்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்தினால் இம் மரணம் சம்பவித்துள்ளதென்பது தெரியவில்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.விஜேசுந்தர தெரிவித்தார்.

இம் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.