நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் 722 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 694 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 742 பேருக்கு நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேருக்கும் நேற்று கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இஸ்ரேலில் இருந்து வந்த 29 பேரும், மாலைத்தீவில் இருந்து வந்த ஒருவரும் அவர்களில் அடங்குகின்றனர்.