உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வைத்தியர் ஹரித அலுத்கே வலியுறுத்து

உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வைத்தியர் ஹரித அலுத்கே வலியுறுத்து

நாட்டில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில், அதிகாரிகள் செயற்திறனுடன் பதிலளிக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் அதிகாரி வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாட்டுக்குள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே, இந்த வைரஸ் மூலமாக எவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை, வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைக்கப்பெறும் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அவசியமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.