பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடற்படை வீரர் கைது..!

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடற்படை வீரர் கைது..!

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எல்ல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயது பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த வழக்கு தொடர்பாகவே காவல்துறையினர் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலையில் உள்ள ஒரு முகாமில் வேலை செய்து வந்த 31 வயது கடற்படை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கைரேகை பரிசோதனையின் போது குறித்த சந்தேக நபரின் கைரேகைகள் பொருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட கடற்படை வீரரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணையை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.