
நாட்டில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவு!
நாட்டில் மேலும் நான்கு கொவிட்19 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உயர்வடைந்துள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருவளை பகுதியை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவருக்கு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா நிலை, குருதி விஷமானமை மற்றும் புற்று நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெரனியகலை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு கடந்த 24 ஆம் திகதி மரணித்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 தொற்றால் குருதி விசமானமை, நியுமோனியா, மற்றும் பல அவையங்கள் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வரகாகொட பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா மற்றும் குருதி விசமானமை மற்றும் பல அவையங்கள் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணமாகும்.
இதேவேளைஇ கொழும்பு 8 பகுதியை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா காரணமாக இதயம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது