யாழில் தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக வழக்கு பதிவு

யாழில் தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக வழக்கு பதிவு

வடமராட்சி மாலுசந்திப் பகுதியில் நடக்கும் தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கடுமையான சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டமை தொடர்பில் செய்தி சேகரித்ததால் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த ஊடவியலாளர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில்,

மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்களின் பிரச்சார கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

அங்கு நான் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தேன். அங்கு வழமைக்கு மாறாக அதிகரித்த சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். என்னையும் வழிமறித்து சோதனை செய்தனர்.

உனது உடமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர். பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளை நான் புகைப்படம் எடுத்திருந்தேன்.

இதன் போது என்னுடன் முரண்பட்டுக் கொண்ட பொலிஸார் தமது கடமைகளுக்கு நான் இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 3 குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.