யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பௌத்த விகாரை சேதம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள பௌத்த விகாரை சேதம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது