நேற்றைய தினம் கொரோனாவால் மரணித்தவர்கள் தொடர்பான விபரங்கள்..!
இரத்தினபுரியில் நேற்றையதினம் இரண்டு கொவிட்19 மரணங்கள் பதிவாகின.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது.
இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றின் சிக்கலான நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா மற்றும் வலிப்பு நோய் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
