யாழில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்து -நால்வர் ஆபத்தான நிலையில்

யாழில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்து -நால்வர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் - சாவகச்சோி, நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 4 போ் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

குறித்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாாிலிருந்து - யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த 4 போ் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.