வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி!

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 410 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் யாழ்.மாவட்டத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் கீரிமலை  பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேருக்கும் , கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செயற்ப்பட்டுள்ளதாக வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.