காங்கேசன்துறை கடற்கரையில் மூடை மூடையாக கரையொதுங்கிய கஞ்சா

காங்கேசன்துறை கடற்கரையில் மூடை மூடையாக கரையொதுங்கிய கஞ்சா

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை நேற்று நண்பகல் மீட்டனர்.

எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸாராால் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டதோடு குறித்த சம்பவத்தோடு தொடர்புடையவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.