
கிளிநொச்சியில் துயரம் - உணவின்றி உயிரைவிடும் மாடுகள்
கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் 500 மாடுகள் வரை வளர்க்கும் த. சுவேந்திரன் என்பவரது மாடுகள் தற்போது போதிய உணவின்றி நாளாந்தம் இறந்து வருவதாக கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.
தற்போது மாடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாத நிலைமை கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ளது. எங்கும் நெற்பயிர்ச் செய்கை, குளங்களும் நிரம்பியுள்ளன.
எனவே மாடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாத நிலைமை காரணமாக போதுமான உணவின்றி இறந்து வருகின்றன. இதுவரை எட்டு மாடுகள் இறந்து விட்டன. பல மாடுக்களுக்கு சேலைன் ஏற்றப்பட்டுகொண்டிருக்கிறது. அவையும் தப்பி பிழைக்குமா என்பது சந்தேகமே. என வேதனையுடன் தெரிவிக்கின்றார்.