யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்தது கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்தது கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில், 120 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.