விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

ஆனையிரவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா அம்மான் கருத்து வெளியிட காரணமாக இருந்த, காரைத்தீவு பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்ட கருத்து குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.

காரைத்தீவு பிரதேச சபையின் தவிசாளர், கருணா அம்மான் கொரோனாவை விட ஆபத்தானவர் என்று முன்னதாக வெளியிட்டிருந்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையிலேயே விநாகமூர்த்தி முரளிதரன் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக அவர்கள் இருவர் குறித்தும் விசாரணை நடத்தப்படவிருப்பதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்