யாழில் தொடர்ந்து நடக்கும் கொடூர சம்பவம்!

யாழில் தொடர்ந்து நடக்கும் கொடூர சம்பவம்!

வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நிறைமாத பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று இறைச்சியாக்கியுள்ளனர்.

குறித்த பசுமாடு 20 நாட்களுக்குள் கன்று ஈனுவதற்கு இருந்தாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் தொடர்ந்து வளர்ப்பு மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணத்தையும் தீவகத்தையும் இணைக்கும் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில் மண்டை தீவு சந்தியில் இராணுவம், பொலிஸாரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் தீவகத்தில் தொடர்ந்து பசுமாடுகள் உட்பட மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரியுள்ளனர்.