யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் விபரம் வெளியானது

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் விபரம் வெளியானது

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 402 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மருத்துவர் க.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.