இன்று முற்பகல் 10.00 மணி முதல் அமுலாகும் வகையில் நீர் வெட்டு..!
ஹேகித்த வீதியில் நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கை காரணமாக இன்று முற்பகல் 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி ஹேகித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, கலகஹதுவ, மருதானை வீதி, எலகந்த மற்றும் ஹெந்தலை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.