யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 10 பேருக்கு கொரோனா..!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 10 பேருக்கு கொரோனா..!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலைத்தில் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், யாழப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளில் 8 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏழாலை பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் இணுவில் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், வவுனியாவை சேர்ந்த 3 பேருக்கும் தொற்றுறுதியானதாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இதேவேளை, மருதனார்மடம் பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.