முடக்கப்பட்ட உடுவில் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பில் சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

முடக்கப்பட்ட உடுவில் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பில் சுகாதாரப் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முடக்க நிலை தொடர்பாக இன்று மாலை வெளியாகும் பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில், தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண கொரோனா தொற்று நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அத்தோடு உடுவில் கோட்டப் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கான ஆலோசனை, மாகாண கல்வித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தமக்கு காய்ச்சல், இருமல் போன்றன அறிகுறிகள் தென்பட்டால் 021 222 66 66 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு, உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.