பளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கோர சம்பவம்!

பளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கோர சம்பவம்!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பளை புதுக்காட்டுச் சந்தி பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் புலோப்பளை மேற்கை சேர்ந்த கிருஸ்ணன் நவநீதன் என்பவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் புதுகாட்டுச் சந்தியிலுள்ள காபட் நிறுவனத்துக்கு திரும்பிய வேளை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவமானது இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. விபத்திற்குள்ளான நபரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.