உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத தொற்றுக்குள்ளான சடலங்களை உனடடியாக தகனம் செய்யுமாறு ஆலோசனை
கொரோனா தொற்றினால் மரணமடைந்து உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களின் சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு சட்ட மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
சுகாதாரத்திற்கு பாாிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இச்செயலைச் சுட்டிக்காட்டி, இது குறித்தான ஆலோசனைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளையடுத்தே சட்ட மா அதிபர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்.
தற்போது உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 19 சடலங்கள் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.