 
                            ஆசிாியர் தாக்கியதால் மாணவி வைத்தியசாலையில்...!
கலென்பிந்துனுவெவ - ஹிம்புட்டுகொல்லேவ வித்தியாலயத்தின் ஆசிாியரொருவர் தாக்கியதன் காரணமாக மாணவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவமானது ஆசிாியரால் வீட்டில் செய்துகொண்டு வரும்படியாக கூறப்பட்ட பயிற்சிகளை செய்து முடிக்காமை காரணமாகவே இடம்பெற்றுள்ளது.
11ம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவியின் பெற்றோர் நேற்று மாலை கலென்பிந்துனுவெவ காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேற்படி மாணவி கலென்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாக்குதலை மேற்கொண்ட ஆசிாியாிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக கலென்பிந்துனுவெவ காவல் துறையினர் தொிவிக்கின்றனர்
 
                     
                                            