கினிகத்தேன - பிளக்வோட்டர் தோட்டம் மனித நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

கினிகத்தேன - பிளக்வோட்டர் தோட்டம் மனித நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட  கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டம் மனித நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வேறு நபர்கள் எவரும் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் கூறினர்.

இதேவேளை, ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.