நெருக்கடியான சூழலில் இலங்கை! சவால்கள் உண்டென எச்சரிக்கை

நெருக்கடியான சூழலில் இலங்கை! சவால்கள் உண்டென எச்சரிக்கை

கொரோனா தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் நிவாரண கொடுப்பனவையும் வழங்கியுள்ளது.

எனவே, 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 தொடக்கம் 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.