நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!

இலங்கையில் நேற்று கொவிட் 19 தொற்று காரணமான 3 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இதன்படி, இலங்கையில் பதிவான கொவிட் 19 ஆல் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது

கோட்டே பகுதியை சேர்ந்த 98 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறதியாதை அடுத்த, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேநேரம், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் சிறுநீரக செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கோன பகுதியை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.