நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்..!

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்..!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் புதிதாக சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கொவிட்- 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொம்பனித்தெரு காவல்துறை அதிகார பிரசேதத்தில் ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பகுதியும், கறுவாத்தோட்ட காவற்துறை அதிகார பிரிவில் 60ம் தோட்டமும், வெள்ளவத்தை காவற்துறை அதிகார பிரிவில் கோகிலா வீதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவற்துறை அதிகார பிரிவின் கெரவலப்பிட்டி, ஹேக்கித்தை, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிக்கடமுல்ல ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அத்துடன் பேலியகொடை காவற்துறை அதிகார பிரதேசத்தில் பேலியகொடவத்த, பேலியகொட - கங்கபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேல்குறிப்பிட்ட பகுதிகளை தவிர வத்தளை, பேலியகொடை காவற்துறை அதிகார பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் இன்று அதிகாலை ஐந்து மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

இதுதவிர, களனி காவற்துறை அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கிரிபத்கொடை காவற்துறை அதிகார பகுதியின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் புளுமெண்டல் காவற்துறை அதிகார பிரதேசமும், வெல்லம்பிட்டி காவற்துறை அதிகார பிரதேசத்தின் விஜயபுர கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அத்துடன் கொம்பனித்தெரு காவற்துறை அதிகார பிரதேசத்தில் வேகந்த கிராம சேவகர் பிரிவும், பொரளை காவற்துறை அதிகார பிரதேசத்தில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி காவற்துறை காவற்துறை அதிகார பிரதேசத்தில் சாலமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு தொகுதி என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

அதேநேரம் மட்டக்குளி காவற்துறை அதிகார பிரதேசத்தில் ரந்திய உயன வீடமைப்பு தொகுதியும், பேர்கசன் வீதி தெற்கு பகுதியும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல்வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.