
நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பொழியும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்கம்
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும்.
இதேவேளை, வட மாகாணத்தில் வீசிய 'புரெவி' சூறாவளி காரணமாக இதுவரையில் 27 ஆயிரத்து 613 குடும்பங்களை சேர்ந்த 91 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.