பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா!

பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா!

வி ஐ பி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேர் உட்பட 1277 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களில் 925 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

எனினும் 352 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதிலும் 265 பேர் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களாவர்.

நாட்டிலுள்ள 85 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸ் கொவிட் கொத்தணி விபரம்

பொலிஸ் நிலையம் எண்ணிக்கை

கோட்டை 162

பொரள்ளை 107

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு 68

வாழைத்தோட்டம் 76

கிரான்பாஸ் 39

மருதானை 23

புறக்கோட்டை 20

குற்றப் புலனாய்வு திணைக்களம் 15

சுற்றாடல் பொலிஸ் பிரிவு 12

பேராதனை 08

கறுவாத்தோட்டம் 31