கிளிநொச்சி சென்றால் பீ சீ ஆர் பரிசோதனை...!

கிளிநொச்சி சென்றால் பீ சீ ஆர் பரிசோதனை...!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பி சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற வானங்கள் நிறுத்தப்பட்டு, பீ சீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 67 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று பெறப்பட்டுள்ள பி சிஆர் மாதிரிகள், கிளிநொச்சி கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தி நாளை அறிக்கை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.