கிளிநொச்சி பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்

கிளிநொச்சி பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் வகுப்புகள் மீள் அறிவித்தல் வரும் வரை நடத்தப்படக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலவரம் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கலந்துரையாடலின் அடிப்படையில், பல்வேறு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நாளைய தினம் ஆரம்பிக்கும்படி அனைத்து பாடசாலைகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரும் பி.சி.ஆர் பரிசோதனையை தொடர்ந்தே முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.