காங்கேசன்துறை கடலலையில் சிக்கிய இரு இளைஞர்கள்: மீட்கப்பட்டது மற்றைய சடலம்!

காங்கேசன்துறை கடலலையில் சிக்கிய இரு இளைஞர்கள்: மீட்கப்பட்டது மற்றைய சடலம்!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை தல்சவென இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேரும் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19) மற்றும் மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) ஆகிய இருவருமே இவ்வாறு கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் சிவச்சந்திரன் நிரோஜனின் சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது.

மற்றையவர் தொடர்பில் கடற்படை தொடர்ந்தும் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இருவரது சடலமும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.