இன்றைய நாளில் மாத்திரம் 487 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய தினம் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 487 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 22,988ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026