எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டன..!

எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டன..!

எஹெலியகொட - திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதன்படி அந்த தொழிற்சாலையில் இதுவரையில் 60 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரதேசத்தில் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டன.