16 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது

தீவிர புயலாக இருந்த நிவர், தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்த நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

 

தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது. நகர்ந்து வரும் வேகம் 11 கி.மீட்டரில் இருந்து 16 கி.மீட்டர் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது அதிதீவிர புயலாக நிவர், கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 570 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.