உயிரிழப்பவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் தேவை இல்லை : சுகாதார தரப்பு!

உயிரிழப்பவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் தேவை இல்லை : சுகாதார தரப்பு!

நாட்டில் உயிரிழக்கும் அத்தனை பேருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அச்சநிலைமை காணப்படும் பகுதிகள். தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தனிமை படுத்தல் நிலையங்களில் உயிரிழக்கும் நபர்களுக்கே PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று. தனிமை படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள் யாரேனும் ஒருவர் உயிரிழந்தால். அவருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.