யாழில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை

யாழில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை அடுத்து கொவிட் - 19 தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நேற்று மாலை இந்த தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன், உள்ளிட்ட 6 பேரைக் குறிப்பிட்டு ஊர்காவற்றுறை காவல்துறையினரால் நேற்று நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

வேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் உள்ளன என்று தகவல் கிடைத்திருப்பதாக, காவல்துறையினர் இதன்போது மன்றில் தெரிவித்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.

அதனால் காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கொவிட் - 19 நோய்த் தொற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவு வழங்கியுள்ளது.