யுவதி பொலிஸாவதை தடுக்க திட்டமிட்டு நாடகமாடிய நபர் சிக்கினார்

யுவதி பொலிஸாவதை தடுக்க திட்டமிட்டு நாடகமாடிய நபர் சிக்கினார்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருந்த யுவதியை தடுக்கும் வகையில், யுவதியின் வீட்டுக்கு பின்புறத்தில் கசிப்பு கேன்களை மறைத்து வைத்த நபரை, கராண்டுகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதியின் கராண்டுகலை என்ற இடத்தில் நேற்று மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து யுவதியின் வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை மீட்டதுடன், குறிப்பிட்ட யுவதியையும் கைது செய்தனர்.

எனினும் குறித்த யுவதி நேர்முகப்பரீட்சைக்கு தோற்றினால்,தொழில் கிடைத்துவிடும். அதனைத் தடுக்கும் முகமாகவே, கசிப்பு நிரப்பப்பட்ட இரு கேன்களை யுவதியின் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்தமையை கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

யுவதிக்கு,பொலிஸ் உத்தியோகத்தராக தொழில் கிடைத்துவிட்டால் நம்மால் வாழமுடியாமல் போய்விடுமென்ற அச்சத்தினாலேயே,தான் இதை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட நபரின் வீட்டை சுற்றிவளைத்த போது கசிப்பு நிரப்பப்பட்ட மூன்று கேன்களை கைப்பற்றினர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யுவதியின் அயல் வீட்டைச் சேர்ந்தவரும்,பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் திட்டமிட்டு இச் செயலைப் புரிந்தமை தெரியவந்துள்ளது.