குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க புதிய திட்டம்.!

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க புதிய திட்டம்.!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் நில்வலா மற்றும் ஜின் கங்கைகளின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் ஜின் கங்கை மற்றும் நில்வலா கங்கை தடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஜின் கங்கையிலிருந்து 2000 கனமீற்றர் நீரும் நில்வலா கங்கையில் இருந்து 1200 கனமீற்றர் நீரும் கடலுக்கு அடித்துச் செல்லப்படுகின்றது.

இந்த நீரை முறையாக பயன்படுத்துவதற்கான ஆய்வுக் கற்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.