ஊழியர்கள் போக்குவரத்து - பேருந்துகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

ஊழியர்கள் போக்குவரத்து - பேருந்துகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை அழைத்து வருவதற்கு இந்த பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சேவையை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழுள்ள இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

குறித்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஒன்லைன் மூலமாக கிழுள்ள மின்னஞ்சலுக்கு, வட்ஸ் எப் இலகத்திற்கு அல்லது தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்ப முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இணையத்தளம் - www.ntc.gov.lk
மின்னஞ்சல் - staffservices@ntc.gov.lk
வட்ச் எப் இல - 0704361101
தொலை நகல் - 0112503725

இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு 1955 என்ற இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும்.