“உங்கள் வீடுகளில் முதியவர்கள் இருக்கின்றார்களா? இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

“உங்கள் வீடுகளில் முதியவர்கள் இருக்கின்றார்களா? இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியும் அவதானம் செலுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வீட்டில் மரணிக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகளில் சிலருக்கு கொவிட்19 தொற்று இருக்கின்றமை தெரியவந்தது.

இந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம், அவர்களது நலன்தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.