ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான புதிய சீனத்தூதுவர்..!
இலங்கைக்கான புதிய சீனத்தூதுவர் சி ஜிங்ஹோங் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் பல்வேறு முதலீட்டு உற்பத்தியாளர்கள் இருப்பதாகவும் அவர்களை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.