கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 6 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 630 பொலிஸ் அதிகாரிகளும் 203 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.