பேனாவை பயன்படுத்தும்போது கவனம் தேவை – பொலிஸாரின் எச்சரிக்கை

பேனாவை பயன்படுத்தும்போது கவனம் தேவை – பொலிஸாரின் எச்சரிக்கை

வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சொந்த பேனாவை எடுத்துச் சென்று இவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பானதுடன், சுகதாரமானதாகவும் இருக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.