வவுனியாவில் மீட்கப்பட்டுள்ள அபாயகர பொருள்! நீதிமன்றின் உத்தரவுடன் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

வவுனியாவில் மீட்கப்பட்டுள்ள அபாயகர பொருள்! நீதிமன்றின் உத்தரவுடன் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே வெடிபொருளை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தம்பனைச்சோலை பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கிணற்றினை நீண்ட நாட்களிற்கு பின்னர் அதன் உரிமையாளர் துப்புரவாக்கியுள்ளார்.

இதன்போது சேற்றில் புதைந்திருந்த நிலையில் ஆர்பீஜி செல் ஒன்று இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் ஆர்பீஜி செல்லை மீட்டுள்ளதுடன் குறித்த கிணற்றினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுடன் தேடுதல் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.