கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளதா..? சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும்..!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாலனது சமூக தொற்றாக மாறியுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே விடுத்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லை பகுதியிலும் மேல் மாகாணத்திலும் கொவிட் 19 தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த தடுப்பு பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.