
எந்தப் பகுதியில் நடமாடினாலும், முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும்...!
நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்தப் பகுதியில் நடமாடினாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தமது நடவடிக்கைகளை தொடரந்தும் முன்னெடுப்பதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்