
88 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்...!
கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 88 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து இன்று அதிகாலை 12.40 அளவில் 29 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்
அத்துடன் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டாரில் இருந்து 37 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரம் இன்று அதிகாலை 5.20 அளவில் கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு மேலும் 22 இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர்.
அவர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.218 ரக விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.